வெள்ளி, 29 மே, 2026
ஒரு பிஞ்சுக்காக ஏற்றிய மெழுகுவர்த்தி ; முதியோர் காப்பகத்தில் இருந்த தாயை மகனுடன் சேர்த்த சம்பவம் - கோவையில் ‘ஈரநெஞ்சம்’ நெகிழ்ச்சி !!!
ஒரு பிஞ்சுக்காக ஏற்றிய மெழுகுவர்த்தி ; முதியோர் காப்பகத்தில் இருந்த தாயை மகனுடன் சேர்த்த சம்பவம் - கோவையில் ‘ஈரநெஞ்சம்’ நெகிழ்ச்சி !!!
‘அஞ்சலி ஒளியில் கிடைத்த அசல் முகவரி’: சின்ன தடாகம் மூதாட்டியை ஆவணங்களுடன் மீட்டெடுத்த மகன் !!!
கோவை சிறுமி படுகொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு, ‘ஈரநெஞ்சம்’ ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்திய மௌன அஞ்சலி நிகழ்வு, ஒரு நெகிழ்ச்சியான மனிதநேய சம்பவத்திற்கும் காரணமாகி உள்ளது.
அந்த அஞ்சலி நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன. அந்தப் படங்களில் இடம்பெற்றிருந்த 70 வயதான சுமித்ரா என்ற மூதாட்டியை பார்த்து, அவரது மகன் விஜயகுமார் தனது தாயை அடையாளம் கண்டு உள்ளார்.
இதையடுத்து அவர் உடனடியாக ‘ஈரநெஞ்சம்’ காப்பகத்திற்கு வந்து, “இவர் என் தாயார்” என தெரிவித்ததுடன், அதற்கான உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்தார். பின்னர் தனது தாயை அழைத்துச் சென்றார்.
சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா அவர்கள், கடந்த 07.02.2026 அன்று காவல்துறை உதவியுடன் ‘ஈரநெஞ்சம்’ காப்பகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் தனது முழுமையான முகவரி மற்றும் குடும்ப விவரங்களை சரிவர தெரிவிக்க முடியாத காரணத்தால், காப்பகத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வந்தார்.
அவருக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் ‘ஈரநெஞ்சம் அறக்கட்டளை’ தொடர்ந்து செய்து வந்தது.
தனது தாயை பாதுகாப்பாக பராமரித்து கவனித்து வந்த ‘ஈரநெஞ்சம்’ காப்பகத்திற்கு விஜயகுமார் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
ஒரு பிஞ்சு குழந்தைக்காக கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய முதியோர்களின் அந்த மனிதநேய தருணமே, இன்னொரு தாயை அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைத்திருக்கிறது என்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
~ ஈரநெஞ்சம் அறக்கட்டளை
கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு அமைச்சருடன் சந்திப்பு ; ஒரு மாதத்திற்குள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு” - 11 அம்ச கோரிக்கைகளை கேட்டறிந்த பின் அமைச்சர் அளித்த உறுதிமொழி !!!
கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு அமைச்சருடன் சந்திப்பு ; ஒரு மாதத்திற்குள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு” - 11 அம்ச கோரிக்கைகளை கேட்டறிந்த பின் அமைச்சர் அளித்த உறுதிமொழி !!!
டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலம் முழுவதும் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அவர்களை கோவை சுந்தராபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில், 480 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இருந்தபோதிலும், கடந்த 23 ஆண்டுகளாக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்து காலத்தை கடத்தாமல், உடனடியாக அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும், இஎஸ்ஐ (ESI) மருத்துவ திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். வாய்மொழியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாவட்ட மேலாளர்களுக்கான அதிகாரங்களை (மீளப் பணியிடம், பணிமாற்றம் உள்ளிட்டவை) மீண்டும் அவர்களுக்கே திரும்ப வழங்க வேண்டும்.
நீண்ட நாட்களாக கடை பணி மறுக்கப்பட்டு கிடங்குகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஒழுங்கு நடவடிக்கை முடிவு பெறாமல் பணிவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கும் உடனடியாக கடை பணியுடன், வழங்கப்படாத பிழைப்பூதியத்தையும் வழங்கிட வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு 500 மீட்டர் என்ற இலக்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் முறையான ஆய்வு செய்யாமல், FL2 தனியார் மனமகிழ் மன்றங்களுக்கு ஆதாயம் தரும் வகையில் மூடப்பட்ட 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மறுஆய்வு செய்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விதிமீறல் மது விற்பனைக்கு தடை: FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மனமகிழ் மன்றங்களில், விதிமுறைகளுக்கு மாறாக உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்வதையும், 180 மி.லி மது வகைகளை வழங்குவதையும் கடுமையான விதிமுறைகள் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமல்படுத்தப்பட்ட காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்துவதை விடுத்து, மாற்றுத் திட்டம் மூலம் அதனை செயல்படுத்த வேண்டும்.
கடந்த ஓராண்டாக அமலில் உள்ள End to End Billing முறையில் நிலவும் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்து, அனைத்து கடைகளிலும் தடையற்ற வைஃபை (WIFI) இணைய வசதி ஏற்படுத்தித் தருவதோடு, கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
சமூக ஆர்வலர் மற்றும் போலி பத்திரிகையாளர் என்ற பெயரில், ஆதாயம் அடையும் நோக்கில் அரசுக்கும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளின் மின் கட்டணம், அட்டை பெட்டி கழிவு, உடைந்த பாட்டில்கள் இழப்பீடு, இறக்கு கூலி, கட்டிட வாடகை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து நிர்வாக செலவுகளையும் ஊழியர்கள் தலையில் சுமத்தாமல், நிர்வாகமே முழுமையாக ஏற்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு பரிசீலித்து, உரிய தீர்வு காண வேண்டும் என இக்கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மனுவில் கேட்டுக்கொண்டு உள்ளது.
கோவை ரயில் நிலையம் அருகே ரூபாய் 1 கோடி நகை கொள்ளை முயற்சி வழக்கு ; நெல்லை வாலிபர்கள் கைது - கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கிய காவல்துறை !!!
கோவை ரயில் நிலையம் அருகே ரூபாய் 1 கோடி நகை கொள்ளை முயற்சி வழக்கு ; நெல்லை வாலிபர்கள் கைது - கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கிய காவல்துறை !!!
கோவை .செல்வபுரம் பகுதியில ஒரு தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. இங்கே முருகேசன் (55) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்த கடையில் சென்னையில் இருந்து ஆர்டர் வாங்கி வந்து ஊழியர்கள் தங்க நகைகள் செய்து கொடுத்து வருகிறார்கள்.
இந்த கடையில் செய்யப்படும் தங்க நகைகளை ரயில் மூலம் மீண்டும் சென்னை கொண்டு சென்று அங்கே கடைகளுக்கு கொடுத்து விட்டு பணத்தைப் பெற்று வருவார்கள்.
சம்பவத்தன்று முருகேசன் சென்னை சென்றார். அங்கு உள்ள கடைகளுக்கு ஆர்டர் கொடுத்த நகை கடைகளுக்கு ஆபரணங்களை கொடுத்தார்.
அதன் பிறகு மீதி தங்க நகைகளுடன் நேற்று இரவு சென்னையில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை புறப்பட்டு வந்தார்.
கோவை ரயில் நிலையம் வந்ததும் நகைகள் அடங்கிய பேக்கை தோளில் அணிந்து கொண்டு ரயில் நிலையம் பின்புறம் பகுதியில் குட் ஷட்ரோட்டில நடந்து சென்றார்
அங்கு அவருக்கு நகைக் கடைக்கு சொந்தமான கார் காத்து இருந்தது. அதில் ஏற முருகேசன் காரை நோக்கி சென்றார். அப்போது கார் அருகே சென்ற போது, ஒரு மோட்டார் சைக்கிளை 3 பேர், வந்தனர்.
திடீரென்று முருகேசனை தாக்கி பேக்கை பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்த முருகேசன் நகைகளை கொண்ட பையை விடாமல் பிடித்து கொண்டு காரில் ஏறி தம்பி சென்று விட்டார்.
டிரைவர் சாமர்த்தியத்தால் இந்த கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டது. முருகேசன் வைத்து இருந்த பையில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருந்ததாக கூறப்பட்டது.
இது குறித்து முருகேசன் தனது கடை உரிமையாளரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து நகை வியாபாரிகள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
இது குறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா ? என விசாரணை நடத்தினர்.
இதில் நகைகளை கொள்ளை அடித்த நெல்லையை சேர்ந்த இசக்கி பாண்டி (வயது 23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 22) என தெரியவந்தது. அவர்களை உக்கடம் போலீசார் கைது செய்தனர்.
கோவையில் ஜூன் 4 முதல் ‘இன்டெக் 2026’ சர்வதேசக் கண்காட்சி; கொடிசியா வளாகத்தில் 700 அரங்குகள் தயார்!!!
கோவையில் ஜூன் 4 முதல் ‘இன்டெக் 2026’ சர்வதேசக் கண்காட்சி; கொடிசியா வளாகத்தில் 700 அரங்குகள் தயார்!!!
6 நாடுகள், 13 மாநிலங்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட இயந்திரப் பொறியியல் திருவிழா : புதிய தொழில் முனைவோருக்கு கருத்தரங்கம் !!!
கோவை, கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் 'இன்டெக் 2026' எனும் சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.
இக்கண்காட்சி குறித்து கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன், இன்டெக் தலைவர் பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது,
இன்டெக் 2026 கண்காட்சி ஜூன் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளதாகவும், இதில் ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, தைவான், சீனா மற்றும் கொரியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்தும், கோவா குஜராத் ஹரியானா கர்நாடகா கேரளா மகாராஷ்டிரா உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் தெலுங்கானா புதுடெல்லி பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களில் இருந்து 460 க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள், 700க்கும் மேற்பட்ட அரங்குகளில் தங்களது இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இதன் மூலம் சர்வதேச தொழில் உற்பத்தி மையமாக தென்னிந்தியாவையும் குறிப்பாக கோயம்புத்தூரையும் உருவாக்குவதற்கான பெரும் முயற்சியாக இக்கண்காட்சி 21வது முறையாக நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இக்கண்காட்சியில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உற்பத்தி, ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், அளவீட்டு தொழில்நுட்பங்கள், அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் சிஸ்டம்ஸ், ஸ்மார்ட் ஃபேக்டரி எக்கோ சிஸ்டம்ஸ், லேசர் கட்டிங் மெஷின், சிஎன்சி மெஷின் ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்த ஏராளமான இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயங்குவதை நேரடியாக காணும் வகையில் காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவித்தனர்.
மேலும், இக்கணாட்சியின் ஒரு பகுதியாக புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக 'Global Manufacturing Cluster Vision 2047' எனும் சர்வதேச தொழில்நுட்ப மையங்கள் குறித்த கருத்தரங்கம் ஜூன் 5ஆம் தேதி ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற உள்ளதாகவும் கூறினர்.
மூளைச்சாவு அடைந்து மரணத்திலும் வாழும் திருப்பூர் சிறுவன் ‘உன்னத’ மனிதநேயம் ; உடல் உறுப்புகளைத் தானம் செய்து 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த பெற்றோர் - கோவையில் இருந்து சென்னை, வேலூருக்குப் சென்ற உறுப்புகள் !!!
மூளைச்சாவு அடைந்து மரணத்திலும் வாழும் திருப்பூர் சிறுவன் ‘உன்னத’ மனிதநேயம் ; உடல் உறுப்புகளைத் தானம் செய்து 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த பெற்றோர் - கோவையில் இருந்து சென்னை, வேலூருக்குப் சென்ற உறுப்புகள் !!!
இருசக்கர வாகன விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை, அவரது பெற்றோர் அசாத்திய நெஞ்சுரத்துடனும், அளப்பரிய மனிதநேயத்துடனும் தானமாக வழங்கிய சம்பவம் நிகழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதுடன். ஐந்து நபர்களின் வாழ்க்கைக்குப் புதிய ‘லைவ்’ மறுவாழ்வையும் தந்து உள்ளது.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாந்தமூர்த்தி – தமிழரசி தம்பதியினர். இவர்களது அசல் வாரிசான ரித்தீஷ் குமார் என்ற 13 வயது சிறுவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களம் நெடுஞ்சாலையில் (Mangalam Highway) தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிர்பாராதவிதமாகக் விபத்தில் சிக்கிப் பலத்த காயம் அடைந்து உள்ளார். விபத்தின் பற்றி அறிந்து பதறிப்போன குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாகக் கோவையில் உள்ள பிரபல ‘ராயல் கேர்’ (Royal Care) மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும், சிகிச்சைகள் பலனின்றி நேற்று மாலை சுமார் 5 மணி அளவில், வாலிபர் ரித்தீஷ் குமார் ‘மூளைச்சாவு’ (Brain Dead) அடைந்து விட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தங்களின் மகன் இனி மீண்டு வரமாட்டான் என்ற உண்மையை அறிந்து பெற்றோர் நிலைகுலைந்து போயினர். அந்தப் பெருஞ்சோகத்திலும், சற்றும் யோசிக்காமல் அசாத்திய மனிதநேய முடிவை எடுத்த அவரது பெற்றோர், தங்களது மகனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர்.
இதை அடுத்து, அரசு விதிகளின்படி மாற்று அறுவை சிகிச்சைக்கான தயார் செய்யப்பட்டு, ராயல் கேர் மருத்துவமனையின் மருத்துவர்கள் ரித்தீஷ் குமாரின் உடல் உறுப்புகளைப் பத்திரமாக எடுத்தனர். அதன்படி:
அவரது கல்லீரல் (Liver) – கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கே வழங்கப்பட்டது.
ஒரு சிறுநீரகம் (Kidney) – கோவையில் உள்ள கே.எம்.சி.எச் (KMCH) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மற்றொரு சிறுநீரகம் – வேலூரில் உள்ள நாராயணி மருத்துவமனைக்கு ‘கிரீன் காரிடார்’ மூலம் அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டது.
அவரது நுரையீரல் (Lung) – சென்னை குளோபல் கிளினிக் மருத்துவமனைக்கு (Global Clinic) ஏர் ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது.
சிறு வயதிலேயே விதியின் சதியால் உயிரிழந்த ரித்தீஷ் குமாரின் இந்த உன்னத உறுப்புத் தானம் மூலம், மரணத்தின் விளிம்பில் இருந்த பல்வேறு நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைக்கப் பெற்று உள்ளதாக மருத்துவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர். தங்களின் ஒரே மகனை இழந்த துயரத்திலும், "நம் மகன் மறைந்தாலும் மற்றவர்களின் உடம்பில் அவனது உயிர் வாழட்டும்" என்று முடிவெடுத்த அந்த பெற்றோரின் உன்னதமான தியாகச் செயலைக் அனைத்து பொதுமக்கள் வாழ்த்தி வருகின்றனர்.
சீட்டு விவகாரத்தில் கோவையில் காங்கிரஸ் கோஷ்டி பூசல் வெடித்தது; “அண்ணாமலையிடம் சீட் கேட்டவர் ஸ்ரீநிதி - காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி தாக்கு !!!
சீட்டு விவகாரத்தில் கோவையில் காங்கிரஸ் கோஷ்டி பூசல் வெடித்தது; “அண்ணாமலையிடம் சீட் கேட்டவர் ஸ்ரீநிதி - காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி தாக்கு !!!
எம்.பி ஜோதிமணியின் ‘முறைகேடு’ பதிவுக்கு வேட்பாளர் ஸ்ரீநிதி பதிலடி: “ராகுல் காந்தி, கார்கேவை கேள்வி கேட்காதீங்க!” என மோதல் !!!
காங்கிரஸ் கட்சியில் கோவையில் வேட்பாளராக போட்டியிட்ட ஸ்ரீநிதி கட்சியில் இருந்து விலகியதாக காங்கிரஸ் செயல் தலைவர் காயத்திரி கூறிய நிலையில் வேட்பாளர் ஸ்ரீநிதி அதனை மறுத்து உள்ளார். மேலும் எம்.பி ஜோதிமணியின் பதிவுக்கு ஸ்ரீநிதி பதில் அளித்து உள்ளதும், அதற்கு காயத்திரி கண்டனம் தெரிவித்து உள்ளதும் அக்கட்சியில் பெண் நிர்வாகிகளுக்குள் மீண்டும் கருத்து வேறுபாடு துவங்கி இருப்பதை உணர்த்துகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஸ்ரீநிதி போட்டியிட்டார்.
இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி தெரிவித்து உள்ளார். மேலும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை ஸ்ரீநிதி விமர்சித்தது கண்டனத்திற்கு உரியது என்றும் ஆவேசம் கொண்டார்.
இது குறித்து காயத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,
ஸ்ரீநிதிக்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் சீட்டு வழங்கப்பட்டது. அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வந்தவர் பா.ஜ.க வில் சீட்டு கேட்டு அண்ணாமலையிடம் வாய்ப்பு கேட்டபோது அது மறுக்கப்பட்டது என்றும் அதற்கு பின் தான் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார் ஆனால் அதையெல்லாம் தலைமையில் மறைத்து சீட்டு வாங்கினார் என்றார். உழைத்து ஓட்டு வாங்க யோகிதை இல்லாமல் அடுத்த கட்சிக்கு தாவுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
ஜோதிமணியை விமர்சிப்பதற்கு ஸ்ரீநிதிக்கு கடுகளவு கூட தகுதி இல்லை என்றும் கட்சிக்காக வேலை செய்ய வந்தவர்களை ஸ்ரீநிதி அவமதித்ததாகவும்ர் கே சி வேணுகோபால் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பொழுதும் ஸ்ரீநிதி அவமானப்படுத்தினார் என்றார். காங்கிரஸ் கட்சி மேலிடம் உடனடியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தி.மு.கவிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தாமல் தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது தொடர்பாக தி.மு.க வினர் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருவது தொடர்பான கேள்விக்கு நாங்கள் யார் முதுகிலும் குத்தவில்லை அன்று என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும் தி.மு.க அரசு, அ.தி.மு.க, பா.ஜ.க இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது தான் ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுனா கார்கேவால் பேசி அந்த முடிவு எடுக்கப்பட்டது . தி.மு.க வும் காங்கிரசும் எப்பொழுதும் தாயும் பிள்ளையும் ஆக சகோதரத்துவத்துடன் தான் இருக்கிறது என்றார்.
தமிழக முதல்வர் விஜய் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டு ஜெயித்துக் காண்பித்து உள்ளர். நம்பிக்கை என்ற ஒரு வார்த்தைக்கு அழகையும் அர்த்தத்தையும் சேர்த்தவர் நம்முடைய முதல்வர் விஜய் என்று கூறினார். மேலும் ஸ்ரீநிதி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மேலிடத்தில் பேசப்படும் என்று தெரிவித்தார்.
எம்.பி ஜோதிமணி எக்ஸ் தள பதிவு- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு செயல்முறையில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது.
ஸ்ரீநிதி ஜோதிமணி பதிவுக்கு அளித்த பதில்- வேட்பாளர்கள் ஒரே ஒருவரால் தேர்ந்தெடுக்கப்படவில்லை மல்லிகார்ஜுனா கார்கே அவரால் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் பட்டியல் இறுதியில் செய்யப்பட்டு ராகுல் காந்தி கேசி வேணுகோபால் மற்றும் பரிசீலனை உறுப்பினர்கள் மற்றும் மூத்த நாடாளுமன்ற தலைவர்களால் அங்கீகரிக்க பட்டது. அப்படி இருக்கும் பொழுது இதுபோன்று பகிரங்கமாக தெரிவிப்பது ஒட்டுமொத்த தலைமையின் முடிவு எடுக்கும் திறனை மறைமுகமாக கேள்விக்கு உட்படுத்துவது. பிரச்சாரங்களின் பொழுது மூத்த தலைவர்களின் ஆதரவு இல்லாமலேயே தலைமை எங்களைப் போன்ற இளைஞர்களை ஊக்குதேர்ந்தெடுத்த பொழுது நாங்கள் கட்சி ஒழுக்கத்தை மதித்தோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.